நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. வாக்குச்சாவடி முகவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டை அவசியம்.!

0 2440

தேர்தல் பணிக்கு வரும் வாக்குச்சாவடி முகவர்கள் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்து வருவது அவசியம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவின் போது முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடை முறைகள் குறித்த அறிவிப்பில் இவ்வாறு தெரவிக்கப்பட்டுள்ளது. ஆணையம் வழங்குகிற அட்டையில் புகைப்படம் இருக்காது என்பதால் வாக்குச்சாவடி முகவரை அடையாளம் காண தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்களின் முகவர்கள் இந்த  அடையாள அட்டையை  காட்டினால் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments